தொல்லை தந்த வாலிபரை வெட்டி கொன்ற பெண் : சிவகாசியில் பரபரப்பு
சிவகாசியில் தனது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தொல்லை கொடுத்த வாலிபரை வெட்டி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிவகாசி விஜயலட்சுமி காலனியில் வசித்து வசிப்பவர் மருதாயி (வயது 38). இவரது கணவர் சோனை முத்து இறந்துவிட்ட நிலையில், இவருக்கு திருமணமான ஒரு மகளும், 16- வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில் அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த…
