ஆம்பூர் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 20 கிராம் பறிமுதல், ஆந்திர கும்பலுக்கு வலைவீச்சு
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப், திப்பு சுல்தான் ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தப் பகுதியில் இளைஞர்களைக் குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கத்துறை…
