வீடியோ செய்தி : தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கில் தண்டனை தீர்ப்பு: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது…
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் இந்த வழக்கில் குற்றவாளி என தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உறுதி செய்தார் தண்டனை விவரம் 12 முதல்12 30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்
காஞ்சிபுரம், May 25 : திருப்பெரும்புதூர் அருகே உள்ள பண்ருட்டி கிராமத்தில், வழிபாட்டுத் தலத்தின் நில உரிமை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாதா சிலை உடைக்கப்பட்டதாகக் கூறி, அப்பகுதி கிறிஸ்தவர்கள் திங்கள்கிழமை வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் உள்ளூர் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ சமூகத்தைச்…
கோவை, மே 25 : காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 31 குற்ற வழக்குகள் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ரவுடி உட்பட நான்கு பேரை தொண்டாமுத்தூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (என்ற) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர்களது…
துபாய் தொழிலாளி சக்திவேலின் கண்ணீர் கதை: கட்டாயத் திருமணம், பண மோசடி, மற்றும் கொலை மிரட்டல்! “துபாயில் 7 ஆண்டுகள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்த மொத்தப் பணத்தையும் குடும்பத்தாரிடம் நம்பி ஒப்படைத்தேன். ஆனால், என் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைத்து, தற்போது என் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் (சுமதி, இந்துமதி, தெய்வேந்திரன்) என்னை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததோடு, இரும்பு ராடு மற்றும்…
திண்டுக்கல் , May 24 : பழனியில் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வாயிலாக அநாகரிகமான முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பி அத்துமீறிய சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜகோபால். சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் தனது தனிப்பட்ட…
தென்காசி , May 24 : நிலப் பிரச்சினை தொடர்பான போலீஸ் விசாரணைக்குப் பிறகு விவசாயி ஒருவர் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம், தென்காசி மாவட்டம் சிவகிரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும் பொதுமக்களும் சிவகிரி காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சினையின் பின்னணி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள…
Coimbatore May 24: கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வந்து நைசாக வெள்ளி கொலுசைத் திருடிச் சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கோவையின் மிக முக்கிய வர்த்தக மையமான பெரிய கடை வீதி பகுதியில் ‘பிரண்ட்ஸ் ஜுவல்லரி’ என்ற நகைக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் வியாபார நடைமுறைகள் நடந்து கொண்டிருந்த வேளையில், கடைக்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஊழியர்களிடம்…
சூலூர் May 24 : கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கு பிந்தைய நடைமுறைகள் குறித்து சிறுமியின் தாயார் பவித்ரா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு எவ்வித நிதியுதவியும் தேவையில்லை என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதே தன் வாழ்நாள் கோரிக்கை என்றும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கில் அவசரம் ஏன்? தாயார் கேள்வி வழக்கின் விசாரணை ஒருபுறம்…
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ( 24-05-2026) அன்று நேரிட்ட சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சமையல் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: சிவகங்கை மாவட்டம் செலுகை அடுத்த தளுதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (60). இவரது உறவினர் தூணுகுடி பகுதியைச் சேர்ந்த குமரேசன் (70). சமையல் தொழிலாளர்களான இவர்கள் இருவரும், தங்களது தொழில் நிமித்தமாக திருவாடானையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில்…
வேலூர்/ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனத்திற்கு நள்ளிரவில் தீ வைத்த நபரை, காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிந்த பிறகு,…