லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.58,810 பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் 11 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று சோதனையை தொடங்கினர். அப்போது அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும்…
