Headlines

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : பல்லடத்தில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : பல்லடத்தில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : பல்லடத்தில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

பிற்பகல் சுமார் 3 மணிக்கு துவங்கிய சோதனையானது 10 மணியை கடந்தும் தொடர்ந்தது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் என மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.1.92,300-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *