லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அரூரில் பரபரப்பு
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு, அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர் பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை…
