ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் இரும்புக் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நவி மும்பையில் இருந்து வந்த விமானம், பத்திரமாக தரையிறங்கி நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது விபத்தில் சிக்கியது.
இதில் யாருக்கும் காயமில்லை என்றும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
