திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு வீட்டில்,திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
