வேலூரில் தவெக நிர்வாகிகள் வெறிச்செயல்: நண்பரை பிறந்தநாள் அழைப்பில் அழைத்து கத்தியால் சரமாரி வெட்டிய அதிர்ச்சி
வேலூரில் ஏற்பட்ட வாய்த்தகராறில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இருவர் தங்களது நண்பரையே கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (35). இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமர்ந்து, பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு இவர் அரசமரப்பேட்டையில் உள்ள…
