ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டத்தில் உள்ள முனகபாகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 38,379 கள்ளச்சாராய மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
2024 பொதுத் தேர்தலின் போது, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் ஆய்வாளர் ஈஸ்வர் ராவ் கூறினார். முனகபாகா அருகே உள்ள வுடா லேஅவுட்டில் சாலையில் ரோடு ரோலர் மூலம் மதுபாட்டில்களை அழித்தனர். அனகாபள்ளி காவல் ஆய்வாளர் ஈஸ்வர் ராவ், உதவி ஆய்வாளர் பிரசாத ராவ், கலால் உதவி ஆய்வாளர் லட்சுமிநாயுடு மற்றும் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
